வெறும் 59 நிமிடத்தில் வங்கிக் கடன் பெறுவதற்கான தனி இணைய தளத்தை தொடங்கி வைத்தார் அருண் ஜெட்லி!
சிறு, குறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்களுக்கான வங்கிக் கடன் விண்ணப்பத்திற்கு இன்று மத்திய நிதி அமைச்சகம் தனி இணைய தளம் ஒன்றை தொடங்கியது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இந்த இணைய தளத்தை www.psbloansin59minutes.com தொடங்கிவைத்தார்.
இதன் மூலம் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெற இத்தகைய நிறுவனங்கள் விண்ணப்பித்த 59 நிமிடங்களில் முதற்கட்டமாக கடனுக்கான அங்கீகாரம் / தகுதிக்கு அனுமதி கிடைக்கும். பின்னர் அதிகபட்சம் 7-8 தினங்களுக்குள் இந்த கடன் வழங்க 59நிமிட இணைய தளம் வழி செய்கிறது.