Select Page

City Union Bank



Share this page

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

7 பேர் விடுதலை

அண்மையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, சிறையிலிருக்கும், 7 பேரை விடுவிப்பது தொடர்பாக, ஆளுநருக்கு பரிந்துரைக்க, தமிழக அரசுக்கு அதிகாரமுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்பின் எதிரொலியாகத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை தலைமை  செயலகத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

ஆளுநர்

இதில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 7 பேரை விடுதலை செய்வது குறித்து ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை, ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சரவையின் கருத்துக்கேற்ப, ஆளுநரின் முடிவு அமையும் எனக் கூறப்படுகிறது.


Share this page