இன்று கேரளா மாநில வெள்ள பெருக்கை தனி விமானத்தில் பிரதமர் மோடி பார்வையிட்டார் .பிரதமர் மோடியுடன் கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் இருந்தார் .வெள்ளத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி இடைக்கால மத்திய அரசின் நிவாரண தொகையாக 500 கோடி அறிவித்தார் .இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்த நிதி பற்றாது எனவும் மேலும் நிதி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் .மேலும் கேரளா மாநில வெள்ளத்தை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் எனவும் ராகுல் காந்தி வேண்டுகோள் வைத்துள்ளார்