Select Page

City Union Bank



Share this page

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, மெரினாவில் இடம் ஒதுக்காதது தொடர்பாக விஜய் சேதுபதி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த நேரம் பகைமை காட்டுவதற்கான நேரம் அல்லஎன்று மெரினாவில் இடம் ஒதுக்காதது தொடர்பாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதல்வருமான திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் நேற்று 6.10 அளவில் காலமானார்.அவருக்கு வயது 95

அவரின்மரணம் தமிழகத்தையேமீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம்செய்வதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது பெரும்சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, மெரினாவில் இடம் ஒதுக்காததற்கு தனதுஎதிர்ப்பை அவரது டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ’ இது பகமை பாராட்டுவதற்கான தருணம் அல்ல. தமிழகத்தின் முதல்வராக 5 முறை தேர்வு செய்யப்பட்டவர் என்றமுறையிலும் தமிழுக்கும் மக்களுக்கும் அவர் வாழ்நாள் முழுவதும் சேவை செய்த தலைவர் என்றவகையிலும் அவருக்கு மரியாதைசெய்ய வேண்டும்’ என்று விஜய் சேதுபதி பதிவிட்டுள்ளார்.


Share this page